Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் எழுதிய கடிதம்

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (21:59 IST)
நேற்று முடிவடைந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரனின் அமமுக கட்சிக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டகம் சின்னம் வழங்கியது போல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பரிசுப்பெட்டகம் சின்னமே வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்கும் என கருதப்படுகிறது.
 
மேலும் பொதுச்செயலாளர் பதவியை தான் ஏற்று கொண்டதால் சசிகலாவுக்கு இனி கட்சியில் என்ன பதவி என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், 'சசிகலாவுக்காக அமமுக-வில் தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
 
முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments