Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கப்பூரின் 9வது அதிபர் ஒரு தமிழர்: டிடிவி தினகரன் பெருமிதம்..!

சிங்கப்பூரின் 9வது அதிபர் ஒரு தமிழர்: டிடிவி தினகரன் பெருமிதம்..!
, சனி, 2 செப்டம்பர் 2023 (16:00 IST)
சிங்கப்பூரின் 9வது அதிபர் ஒரு தமிழர் என்ற வகையில் பெருமைபப்டுவதாக அமமுக  பொதுச் செயலாளர் டிடிவி தினகரம் பெருமிதம்  கொள்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 
 
சிங்கப்பூரில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் 9 வது அதிபராக தேர்வாகியிருக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திரு.தர்மன் சண்முகரத்தினத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
 
பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணைப்பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்த திரு.தர்மன் சண்முகரத்தினம், தற்போது மதிப்புமிக்க அதிபர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது
 
சிங்கப்பூரின் எதிர்கால முன்னேற்றத்திற்காக உழைப்பதோடு, அங்கிருக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமும் சிறக்க  பூர்வீக தமிழரான  திரு.தர்மன் சண்முகரத்தினம் உரிய முயற்சிகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையோடு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் வளர்ச்சியால் என் மீது அவருக்கு பொறாமை - சீமான்