Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் ஆட்சிக்கு வந்தா என்ன? தண்ணீர் கிடைக்குமா? டிடிவி தினகரன்!

Webdunia
திங்கள், 21 மே 2018 (13:00 IST)
கர்நாடக தேர்தலின் போது, அங்கு பாஜக் ஆட்சி அமைத்தால் காவிரிநீர் தமிழகத்திற்கு எந்த சிக்கலும் இன்றி கிடைக்கும் என பரவலாக கூறப்பட்டது. ஆனால், அங்கு மஜக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. 
 
உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தை சுமூகமாக முடித்து வைத்தாலும், அது எந்த அளவிற்கு செயல்பாட்டில் வரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இதற்கு இடையில், கர்நாடக அணையில் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை ரஜினி நேரில் காண, விரைவில் கர்நாடக முதல்வராக போகும் குமாரசாமி ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் பின்வருமாறு பேசியுள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழகத்திற்கு பாஜகவால் மட்டுமே காவிரிநீர் கிடைக்கும் என்றும், பொன்.ராதாகிருஷ்ணன் கர்நாடகவில் பாஜக் ஆட்சி அமைத்தால் எந்த சிக்கலும் இன்றி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments