Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, கமலால் அரசியலில் மாற்றமும் இல்லை; எனக்கு பயமும் இல்லை: தினகரன்!

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (19:48 IST)
நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், டிடிவி தினகரன் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையை வரவேற்றாலும், அவர்களால் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை என தெரிவித்துள்ளார். 
 
ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தினகரன் அதிமுக, திமுக போன்ற கட்சிகளை எதிர்த்து அமோக வெற்றி பெற்றார். அதன்பின்னர் சட்டசபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு தனது ஆதிகத்தை நிரூபித்தார். 
 
இந்நிலையில், நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி அவர் பேசியதாவது. ரஜினியும், கமலும் கட்சி தொடங்க போவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தேர்தலில் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை, பயமும் இல்லை. அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்று உறுதியாய் தெரிவித்துள்ளார். 
 
மேலும், உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலம் தெரியும். நாங்கள் அதிமுக அம்மா அணி என்று பெயரில் செயல்படுவோம். ரஜினி, கமல் என எவர் வந்தாலும் நான்தான் எப்போதும் நம்பர் 1 என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments