கமிஷன் அடிப்பதில் பழனிசாமியும் ஸ்டாலினும் ஒன்று தானா? டிடிவி கேள்வி!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (12:02 IST)
பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக டிடிவி தினகரன் சந்தேகித்துள்ளார். 

 
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு தமிழக அரசின் சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பை தொகுப்பும், பணமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்படும் பொங்கல் பை தொகுப்பில் இடம்பெறும் 21 பொருட்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
 
இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சந்தேகித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். 
கடந்த பழனிச்சாமி ஆட்சியில் அரசு டெண்டர்களை எடுத்து புகாருக்குள்ளான திருப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கே பொங்கல் பரிசு வினியோக டெண்டர் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் பெரிய அளவு கமிஷன் கைமாறி இருப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு தரமான பொங்கல் பரிசுத்தொகுப்பு  கிடைப்பது சந்தேகம்தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. 
 
இதற்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? இல்லாவிட்டால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் ஆகியவற்றில் திரு.பழனிசாமியும் திரு.ஸ்டாலினும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்வார்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments