Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைமுகமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா? – டிடிவி தினகரன் கேள்வி!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (12:32 IST)
தமிழகத்தில் நடப்பு மின் கட்டண விகிதம் உயர்ந்துள்ளதாக பலர் கூறி வருவது குறித்து டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக மின் கணக்கீடு மேற்கொள்ளப்படாத நிலையில் முந்தைய மாத மின் கட்டணம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டில் பலருக்கு கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் தி.மு.க அரசு மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் இப்படி மறைமுகமான கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments