Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளக் காணோம்.... சட்டசபை பக்கம் தலைக்காட்டாத டிடிவி தினகரன்!!

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (15:38 IST)
தமிழக சட்டசபைக்கு இன்று டிடிவி தினகரன் வரவில்லை என்பதால் அவர் ஏன் வரவில்லை என சில விளக்கங்கள் வெளியாகி வருகிறது. 
 
ஜூலை ஒன்றாம் தேதி முதல் தமிழக சட்டசபை தினமும் கூடி வருகிறது. மக்கள் பிரச்சனைகள் விவாதிக்க படுகின்றன. இந்நிலையில் இன்று சட்டசபை பக்கம் தினகரனை பார்க்க முடியவில்லை.
 
உடனே, கட்சியில் இருந்து அனைவரும் விலகுவதால் டிடிவி தினகரன் மன உலைச்சலில் இருக்கிறார் எனவேதான் அவர் வரவில்லை என கூறப்பட்டது. ஆனால், அவர் சசிகலாவை சந்திக்க பெங்களூர் சென்றதால் வரவில்லை என தெரிகிறது. 
சசிகலா சந்தித்த பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியது பின்வருமாறு, அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை. அவர்கள் நிர்வாகிகள்தான். எனவே, கட்சிக்கு அவர்கள் சென்றதால் எந்த பிரச்சனையும் இல்லை. 
 
மேலும், அதிமுகவுக்கு போக முடிவு எடுத்த பிறகுதான் அமமுகவில் இருந்து விலகியுள்ளார் இசக்கி சுப்பையா என தெரிவித்தார். குறுகிய காலத்தில் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோர் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments