Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசும் துணைவேந்தரும் மோதல் - அதிருப்தியில் டிடிவி!!

அரசும் துணைவேந்தரும் மோதல் - அதிருப்தியில் டிடிவி!!
, திங்கள், 12 அக்டோபர் 2020 (16:33 IST)
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசும், துணைவேந்தரும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலையளிக்கிறது என டிடி.வி.தினகரன் டிவிட். 

 
இது குறித்து அவர் விரிவாக தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டின் உயர்கல்வி அடையாளங்களில் முக்கியமானதாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 'உயர் புகழ் கல்வி நிறுவனம்' என்ற அந்தஸ்தை வழங்கும் விஷயத்தில் மாநில அரசும் துணை வேந்தர் சூரப்பாவும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலையளிக்கிறது.
 
அந்த அந்தஸ்தை வழங்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராது என்று எழுத்துபூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு மறுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
 
இந்த நிலையில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல் துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. 
 
இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிரடியாய் விலை குறைந்தது ஒப்போ ரெனோ 3 ப்ரோ: எவ்வளவு தெரியுமா?