அதிமுகவை மீட்கும் நேரம் வந்துவிட்டது: சின்னம்மா வந்த தெம்பில் டிடிவி!!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (12:32 IST)
சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூரு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி. 

 
சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டார். தற்போது விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூரு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். 
 
அப்போது அவர், கொரோனா வார்டில் இருப்பதால் சசிகலாவை பார்க்க முடியவில்லை. அவருடைய விடுதலை எங்களுக்கும், அமமுக தொண்டர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. சசிகலாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. கொரோனா விதிமுறைப்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
சசிகலாவுக்கு இங்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது, டிஸ்ஜார்ஜ் செய்வது என அடுத்த கட்ட முடிவுகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்கும். டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதும், அமோக வரவேற்புடன் சசிகலாவை சென்னைக்கு அழைத்து செல்ல இருக்கிறோம். 
 
தற்போது, அரசியல் குறித்து பேச விரும்பவில்லை. இருப்பினும், உண்மையான அதிமுகவை மீட்கும் முயற்சியே எங்கள் தாரக மந்திரமாக இருக்கும். அதில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments