Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை மீட்கும் நேரம் வந்துவிட்டது: சின்னம்மா வந்த தெம்பில் டிடிவி!!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (12:32 IST)
சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூரு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி. 

 
சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டார். தற்போது விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூரு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். 
 
அப்போது அவர், கொரோனா வார்டில் இருப்பதால் சசிகலாவை பார்க்க முடியவில்லை. அவருடைய விடுதலை எங்களுக்கும், அமமுக தொண்டர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. சசிகலாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. கொரோனா விதிமுறைப்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
சசிகலாவுக்கு இங்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது, டிஸ்ஜார்ஜ் செய்வது என அடுத்த கட்ட முடிவுகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்கும். டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதும், அமோக வரவேற்புடன் சசிகலாவை சென்னைக்கு அழைத்து செல்ல இருக்கிறோம். 
 
தற்போது, அரசியல் குறித்து பேச விரும்பவில்லை. இருப்பினும், உண்மையான அதிமுகவை மீட்கும் முயற்சியே எங்கள் தாரக மந்திரமாக இருக்கும். அதில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments