டிடிஎப் வாசன் மீண்டும் கைது.. மதுரை போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Siva
வியாழன், 30 மே 2024 (07:45 IST)
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன்ஏற்கனவே சாலையில் சர்ச்சைக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் சமீபத்தில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துகுடிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் ஆயுதப்படை காவலர் அளித்த புகாரின் பேரில் டிடிஎப் வாசன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சென்னை - பெங்களூரு சாலையில் டிடிஎப் வாசன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றதாகவும் அப்போது ஏற்பட்ட விபத்தை அடுத்து அவர் சாலையில் அபாயகரமாக வாகனத்தை ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் சில மாதங்கள் கழித்து டிடிஎப் வாசன் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments