Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரத்தில் ஏறி தீக்குளிக்க முயன்ற வாலிபர்.! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

Senthil Velan
திங்கள், 22 ஜனவரி 2024 (17:50 IST)
பட்டா வழங்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாலிபர் ஒருவர், மரத்தில் ஏறி தீக்குளிக்க  முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பூரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி.  இவருக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்க கோரி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தும் பட்டா வழங்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  முனுசாமி, அவருடைய மனைவி, மகன் ராகேஷ் வயது (21) உடன் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
 
அப்போது இளைஞர் ராகேஷ், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தின் உச்சியில் ஏறி, தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய கேனை எடுத்து உடல் மீது ஊற்றிக் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

ALSO READ: ராமர் மீதான நம்பிக்கையை எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது..! வானதி சீனிவாசன்.!!

அங்கிருந்த போலீசார் உடனடியாக மரத்தில் ஏறி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி, அவரை கீழே இறக்கி ஆம்புலன்ஸ் வரவைத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments