Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்திய சோதனை: திமுக கட்சியிலும் இரு கோஷ்டி பிரிவுகளா

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (00:19 IST)
இது என்ன சத்திய சோதனை திமுக கட்சியிலும் இரு கோஷ்டி பிரிவுகளா ? உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு.
 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தலைவர் பதவிக்கு திவ்யா போட்டியின்றி நேற்று காலை உப்பிடமங்கலம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் துணைத்தலைவராக கட்சியின் தலைமை அறிவித்த பாக்கியலெட்சுமி என்னும் நபரை தேர்ந்தெடுக்க, போதுமான கவுன்சிலர்கள் யாரும், வராத காரணத்தினாலும், நேற்று மாலை பாக்கியலெட்சுமி உள்ளிட்ட 3 வார்டு கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்ததால் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் பானுஜெயராணி அறிவித்துள்ளார்.

மேலும், இந்த பதவிக்கு இரண்டு நபர்கள் போட்டியிடுவதாலும், இரண்டு நபர்களுமே திமுக கட்சியை சார்ந்தவர்கள் என்பதினாலும், துணை தலைவர் பதவிக்கு 8 கவுன்சிலர்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை என்பதினால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், உப்பிடமங்கலம் பேரூராட்சி 08.06.1969லிருந்து முதல்நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வரும், இந்த பேரூராட்சி முப்பது குக்கிராமங்களை கொண்ட விவசாய பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments