Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி சிவா -கே.என் நேரு திடீர் சந்திப்பு: சமாதான பேச்சுவார்த்தையா?

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (19:52 IST)
திருச்சி சிவா மற்றும் கேஎன் நேரு ஆதரவாளர்கள் சமீபத்தில் மோதி கொண்டனர் என்பதும் கேஎன் நேரு ஆதரவாளர்களால் திருச்சி சிவாவின் வீடு சமீபத்தில் தாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இது குறித்து இரு தரப்பினர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திமுக தலைமை இது குறித்து நடவடிக்கை எடுத்து நான்கு பேர்ர்களை சஸ்பெண்ட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது திருச்சி சிவா மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். திருச்சி சிவாவின் இல்லத்திற்கே அமைச்சர் கே.என்.நேரு சென்றதாகவும் இரு தரப்பினரும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது 
 
இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே சமீபத்தில் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது திமுக தலைமையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இரு தலைவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து சமாதானம் செய்து கொண்டதாக தெரிகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments