Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்னிங் கொடுத்தும் தொடர்ந்த உல்லாச உறவு: விபரீத முடிவெடுத்த கணவன்!

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (13:12 IST)
திருச்சியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த ரவுடியை தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் ஒரு பெரிய ரவுடி. இவன் மீது பல வழக்குகள் உள்ளது. அதில் கொலை வழக்குகளும் அடக்கம். திருமணமாகு குழைந்தைகள் உள்ள இவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. 
 
இந்த கள்ளத்தொடர்பு அந்த பெண்ணின் கணவனுக்கு தெரியவர ஆனந்தனை எச்சரித்துள்ளார். ஆனால், ஆனந்தன் அடங்குவதாய் இல்லை,. அந்த பெண்ணுடனான கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். 
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவன், ஆனந்தன் கடைவீதி பகுதியில் உள்ள ஒரு விறகு கடையில் தூங்கிக்கொண்டிருந்த போது தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். 
 
சம்பவம் அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்த நபரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments