Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயை கண்டறியும் ஸ்மார்ட் நாற்காலி: திருச்சி இளைஞர் சாதனை..!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (15:40 IST)
ஏற்கனவே நோய்களை கண்டறிய ஸ்மார்ட் வாட்ச் இருப்பது போல் தற்போது நோய்களை கண்டறிய ஸ்மார்ட் நாற்காலி ஒன்றிய திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுபாஷ் என்பவர் ஒரு ஸ்மார்ட் நாற்காலியை கண்டுபிடித்து உள்ளார். இந்த நாற்காலியில் நோயாளிகள் அமர்ந்தால் மட்டும் போதும், எந்த விதமான பரிசோதனையும் செய்யாமல் அவர்களுக்கு என்ன நோய் என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை அளிக்கலாம் என்று அந்த மாணவர் கூறியுள்ளார். 
 
கொரோனா போன்ற தொற்று நோய் ஏற்பட்டபோது, மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகள் அருகில் செய்யாமலேயே சிகிச்சை செய்ய வேண்டும் என்று யோசித்ததாகவும் அந்த யோசிப்பின் விளைவு தான் இந்த ஸ்மார்ட் நாற்காலி என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த கண்டுபிடிப்பின் மூலம் ஸ்மார்ட் நாற்காலியில் நோயாளி உட்கார்ந்தால் உடனே அவரது உடலில் உள்ள குறைகள் குறித்து மானிட்டரில் தெரியவரும் என்றும் அதனை வைத்து அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றும் அந்த மாணவர் விளக்கி உள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments