பின் இருக்கையில் ஹெல்மெட் இல்லாமல் பயணம்! – 18 ஆயிரம் பேருக்கு அபராதம்!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (10:39 IST)
சென்னையில் பைக்கில் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 18 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் விபத்து சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் விபத்துகளையும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போக்குவரத்து காவல் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்னதாக இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. எனினும் மக்கள் பலர் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் சென்று வரும் நிலையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 12 நாட்களில் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 21,984 வழக்குகளும், பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 18,035 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்கள்: என்ன நன்மை? அண்ணாமலை கேள்வி..!

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து எடுக்கப்படுகிறதா?

போலி சுப்ரீம் கோர்ட் ஆர்டர்.. போலி சிபிஐ அதிகாரிகள்.. ரு.1.50 கோடியை இழந்த தம்பதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments