Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படியில் பயணம்.. நொடியில் மரணம்! சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பறிபோன உயிர்!

Lady Death

Prasanth Karthick

, வியாழன், 3 அக்டோபர் 2024 (13:16 IST)

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் தவறி விழுந்து ரயிலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நேற்று வைகை விரைவு ரயில் அதிவிரைவாக சென்றபோது சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை நெருங்கியபோது ரயிலில் பயணித்த இளைஞர் தவறி விழுந்து ரயிலில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

 

விசாரணையில் அந்த இளைஞர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்துள்ளது. ரயிலில் அவர் கதவின் அருகே உட்கார்ந்து வந்துள்ளார். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை, ரயில் வேகமாக கடந்தபோது அவர் கால் நடைமேடையில் வேகமாக மோதியதில் நிலைக்குலைந்து விழுந்த அவர், 150 மீட்டர் தொலைவுக்கு நடைமேடையில் இழுந்து செல்லப்பட்டு, மீண்டும் வேகமாக சென்றுக் கொண்டிருந்த ரயிலின் இடையே சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்லி சல்லியாய் நொறுங்கும் நாம் தமிழர் கட்சி: மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்..!