Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகள் நடத்தும் ஆவீன் பாலகம்..

Arun Prasath
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (19:37 IST)
ஊட்டியில் திருநங்கைகள் நடத்தும் ஆவீன் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், ரேசிங் கிராஸ் பகுதியின் பூமால் வளாகத்தில் முழுக்க முழுக்க திருநங்கைகளே நடத்தும் ஆவீன் பாலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா மற்றும் ஆவீன் இயக்குநர் வள்ளலார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய வள்ளலார், “இந்த பாலகத்தை நீலகிரி சுய உதவிக்குழுவில் உள்ள 5 திருநங்கைகள் நடத்துகின்றனர். இது சிறப்பாக செயல்பட்டால் தமிழகம் முழுவதும் இது போன்ற பாலகங்கள் விரிவுப்படுத்தப்படும், சமூகத்தில் பின் தங்கிய மக்களாகிய திருநங்கைகள் வாழ்வாதாரம் பெரும் நோக்கில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் ”திருநங்கைகள் மாடுகளை வளர்க்க வாய்ப்பிருந்தால், பால் உற்பத்தியை பெருக்க மாடுகள் வாங்க கடனுதவி செய்து கொடுக்கப்படும்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments