Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடி வெற்றி –நர்ஸிங் காலேஜ் சீட் வாங்கி திருநங்கை தமிழ்ச்செல்வி சாதனை

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (14:00 IST)
மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீட்டால் வேலூர் நர்ஸிங் கல்லூரியில் சீட் பெற்று இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியராக சாதனை படைத்துள்ளார் தமிழ்ச்செல்வி

வேலூர் மாவட்டமத்தில் உள்ள புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.தமிழ்ச்செல்வி. திருநங்கையான இவர் 2017-2018 ஆம் ஆண்டுக்கான  பிளஸ் 2 பொதுத்தேர்வில் 74 சதவீத மதிப்பெண் பெற்றார். இதையடுத்து, அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பித்தார். ஆனால் திருநங்கை என்ற காரணத்தினால் அவருக்கு சீட் கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்தது.

இதனையெதிர்த்து தமிழ்ச்செல்வி தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் மற்றும் இந்திய நர்ஸிங் கவுன்சில் ஆகியவற்றில் புகார் அளித்தார். ஆனால் அது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மனதுடைந்த தமிழ்ச்செல்வி படிக்க சீட் கொடுங்கள் அல்லது என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என தமிழக சுகாதாரதுறைக்கு மனு அனுப்பினார்.  இதனால் இந்த விவகாரம் மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது.

இதனையடுத்து அவருக்கு சீட் வழங்க கூறி மனித உரிமைகள் ஆணையம் சுகாதாரத்துறைக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையின் பெயரால் இப்போது அவருக்கு அரசு வேலூர்க் கல்லூரியில் நர்சிங் படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments