Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பலி.. ஒரு விநாடியில் நடந்த துயர சம்பவம்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (17:17 IST)
ஈரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர், ரயிலில் அடிபட்டு பலியான சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அடுத்த மாவிலிபாளையம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு, அந்த நபர் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்துபோனது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த மாவிலிபாளையம் போலீஸார், இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments