Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Breaking: பள்ளி வேனை இடித்து இழுத்துச் சென்ற ரயில்! பள்ளி குழந்தைகள் நிலை என்ன? - கடலூரில் அதிர்ச்சி!

Prasanth K
செவ்வாய், 8 ஜூலை 2025 (09:10 IST)

கடலூரில் பள்ளி வேன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் அடித்து இழுத்துச் சென்றதில் 3 பேர் பரிதாபமாக பலியானதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூரில் செம்மங்குப்பம் பகுதி அருகே பள்ளி வேன் ஒன்று இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது அந்த வழியில் ரயில்வே கேட் ஒன்றை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரயில் பள்ளி வேனை மோதியதுடன், பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் பலர் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

 

இந்த கோர விபத்தில் 3 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில் பல பள்ளி மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் வரும் நேரத்தில் அப்பகுதி ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே விபத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. காலையிலேயே நடந்துள்ள இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து கடலூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 65 வயது முதியவருக்கு என்ன தண்டனை? தீர்ப்பு விவரம்..!

100 ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கொடுங்க.. சாலையோர வியாபாரியிடம் காசு கொடுத்து வாங்கிய ஈபிஎஸ்..!

பிலாவல் புட்டோ ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல.. தீவிரவாதியின் மகன் பேட்டியால் பரபரப்பு..!

மத்தியில் வலுவான ஆட்சி.. மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்படும்: பிரச்சாரத்தை தொடங்கிய ஈபிஎஸ்..!

நோபல் பரிசை வாங்கிவிடுவாரே.. டிரம்ப் பெயரை பரிந்துரை செய்த இஸ்ரேல் பிரதமர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments