Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 65 வயது முதியவருக்கு என்ன தண்டனை? தீர்ப்பு விவரம்..!

Siva
செவ்வாய், 8 ஜூலை 2025 (08:17 IST)
நெல்லையில் 16 வயது பள்ளி மாணவிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லையில் வசிக்கும் முத்துக்குட்டி என்ற 65 வயது முதியவர், 16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
 
கடந்த சில வருடங்களாக நெல்லை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், பாலியல் தொல்லை கொடுத்த முத்துக்குட்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு தரப்பில் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட முத்துக்குட்டிக்கு, ஏழு ஆண்டுகள் கழித்து இந்த ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த தீர்ப்பு நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்