Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடும் பேருந்தில் பெண் போலீஸ் செய்த வேலை: கண்ணை மூடிக்கொண்டு ஓடிய பயணிகள்

ஓடும் பேருந்தில் பெண் போலீஸ் செய்த வேலை: கண்ணை மூடிக்கொண்டு ஓடிய பயணிகள்
, ஞாயிறு, 6 ஜனவரி 2019 (10:54 IST)
பேருந்தில் பெண் போலீஸ் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்ய முயற்சித்ததால் சக பயணிகள் பயந்துபோய்விட்டனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த செண்பகம் என்ற இளம்பெண் திருச்சியில் போலீசாக பணியாற்றி வருகிறார். செண்பகம் பணிபுரியும் அதே காவல் நிலையத்தில் திருச்சியை சேர்ந்த ஜெயதேவன் என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார்.
 
செண்பகத்திற்கு ஜெயதேவனை பிடித்துப்போய் இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்த நிலையில் ஜெயதேவன் வேலை விஷயமாக தன் ஊருக்கு சென்றிருந்தார்.
 
இந்நிலையில் எதிர்பாராதவிதமாய், ஜெயதேவனுக்கு மிகவும் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைக்கேட்டு மிகவும் மன வருத்தத்தில் இருந்த செண்பகம், பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
 
சிறிது நேரத்தில் மயக்கம்போட்ட அவரை பார்த்து சக பயணிகள், பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அலறினர். அவசரமவசரமாக செண்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோக்கன் மன்னனை பார்த்து பயமா? டிடிவியை கண்டமேனிக்கு வாரிய தளபதியார்!!