Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிகளார் பேனரை அகற்றிய ட்ராபிக் ராமசாமி: அடித்து உதைத்த பக்தர்கள்

அடிகளார் பேனரை அகற்றிய ட்ராபிக் ராமசாமி: அடித்து உதைத்த பக்தர்கள்
, புதன், 1 மார்ச் 2017 (22:01 IST)
மேல்மருவத்தூரில் அடிகளார் பிறந்தநாளையோட்டி சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்ற ட்ராபிக் ராமசாமியை பக்தர்கள் தாக்கியுள்ளனர்.


 

 
மேல்மருவத்தூர் அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டு சாலைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. நெடுவாசல் போராட்டத்துக்கு ட்ராபிக் ராமசாமி சென்றுள்ளார். செல்லும் வழியில் இந்த பேனர்கள் முறைகேடான வைக்கப்பட்டுள்ளதை பார்த்து, காரை விட்டு அவைகளை அகற்ற இறங்கி சென்றுள்ளார்.
 
இந்த பேனர்களை அகற்ற முயன்றபோது, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், அவரை அடித்துக் காயமேற்படுத்தியுள்ளனர். தாக்குதலை தடுக்க முயன்ற அவருடைய பாதுகாப்பு போலீஸையும் அடித்துள்ளனர். 
 
இந்த தாக்குதலில் காயமடைந்த ட்ராபிக் ராமசாமி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று பின்னர் நெடுவாசலுகு சென்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.பி, எம்.எல்.ஏ திரும்ப பெறும் மசோதா. வருண்காந்தியின் அதிரடியால் அரசியல்வாதிகள் அச்சம்