Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என்ன ஜெயிலா? சத்திரமா? சசியை வேறு ஜெயிலுக்கு மாற்றுங்கள். டிராபிக் ராமசாமி

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (22:03 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தமிழகத்தில் இருந்து விஐபிக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.

 



 




ஏற்கனவே தமிழகத்தில் ஜெயில் ஆட்சி நடைபெறுகிறது என்று குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அதை நிரூபணம் செய்வது போல் அமைச்சர்கள் உள்பட பலர் அடிக்கடி சசிகலாவை சந்தித்து வருவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு சிறைக்கு சசிகலாவை பார்க்க தமிழக அமைச்சர்கள் அடிக்கடி வருவதால்,அவரை தும்கூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சசிகலா இருப்பது ஜெயிலா? அல்லது தலைமைச்செயலகமா? அல்லது சத்திரமா? என்று அவர் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

டிராபிக் ராமசாமி தனது மனுவில் மேலும் கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா நடராஜன்,இளவரசி மற்றும் நடராஜன் ஆகியோர் பெங்களுரூவில் உள்ள பரப்பன அஹ்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் சசிகலாவை பார்ப்பதற்காக தமிழக அமைச்சர்களில் பலர் அடிக்கடி பெங்களூரு வந்து செல்கின்றனர்.இதனால் தமிழக மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

எனவே தமிழக அமைச்சர்கள் சசிகலாவை பார்க்க வருவதை தவிர்க்க,அவரை தும்கூரில் உள்ள மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments