Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸுக்கே எக்ஸ்ட்ரா காசு போட்டா விக்கிற..? – மதுக்கடையில் களேபரம் செய்த காவலர்

Advertiesment
Tamilnadu
, வெள்ளி, 9 அக்டோபர் 2020 (12:22 IST)
காஞ்சிபுரம் அருகே பூந்தமல்லி போக்குவரத்து தலைமை காவலர் மதுக்கடையில் பாட்டிலை தூக்கி வீசி வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபானக்கடையில் பூந்தமல்லி போக்குவரத்து தலைமை காவலர் முருகனும், அவரது உறவினர் ஒருவரும் மது வாங்க சென்றுள்ளனர். அப்போது முருகனுக்கும் டாஸ்மாக் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த முருகன் தகாத வார்த்தைகளால் பேசியதோடு மது பாட்டிலையும் தூக்கி கடைக்குள் வீச முயன்றுள்ளார். இதை செல்போனில் வீடியோ எடுத்த மதுக்கடை ஊழியர், காவலர் முருகன் மீது புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் மதுக்கடை ஊழியர் அரசு நிர்ணயித்த விலையை விட மதுப்பாட்டில்களுக்கு கூடுதல் விலை கேட்டதாகவும், அதை ஏன் என விளக்கம் கேட்டதற்கு வாக்குவாதத்தில் அவர்கள் ஈடுபட்டதாகவும் காவலர் முருகன் தரப்பில் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.எல்.ஏ திருமண வழக்கு; உண்மையை கூறிய பெண்! – முடிந்தது வழக்கு!