Webdunia - Bharat's app for daily news and videos

Install App

144 போட்டும் டிராஃபிக் ஜாம்: திருந்தாத சென்னை!!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (11:10 IST)
ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு கூடியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று மதியம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது. திடீரென இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்த 124 ஆக உள்ளது. 
 
இதனால் தேசிய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த தடை நீடிக்கப்படுமா என்படை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். 
 
இந்நிலையில், ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மேம்பாலத்தின் 3 புறமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
அதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் கொரோனா விழிப்புணர்வு இன்னும் சென்னை மக்களுக்கு தெரியவில்லையா என்ற ஆதங்கம் எழுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments