Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை நீரை வெளியேற்றும் பணி: தி.நகரில் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (12:04 IST)
தி.நகர் சாலைகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்தது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் காலை சிறிது நேரம் பெய்த மழைக்கு தி.நகர் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இருப்பினும் பணிக்கு செல்லுபவர்கள் வடியாத தண்ணீரில் நடந்து வேலைக்கு செல்கின்றனர். அங்கு பசுல்லா சாலையில் மழை நீரை வெளியேற்றும் பணி நடப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது என போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments