Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த ஒரு மணி நேரம் நீடிக்கும் கனமழை

Advertiesment
அடுத்த ஒரு மணி நேரம் நீடிக்கும் கனமழை
, திங்கள், 22 நவம்பர் 2021 (10:43 IST)
சென்னையில் பெய்து வரும் கனமழை அடுத்த ஒரு மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 

 
வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. 
 
மமயிலாப்பூர், வளசரவாக்கம், போருர், ராமாபுரம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு மணி நேரம் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென ரீசார்ஜ் ப்ளான் விலையை ஏற்றிய ஏர்டெல்! – புதிய ப்ளான் விவரங்கள் உள்ளே..!