ஒரு தலைக் காதல் விபரீதம்: பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை வெட்டிக்கொலை

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (12:32 IST)
ஒரு தலைக் காதலால் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை  வெட்டிக்கொலை  செய்யப்பட்ட சம்பவத்தால் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பதற்றம் நிலவுகிறது.



கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர்  சுப்பிரமணியன் . இவரது மகள் ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ரம்யாவை குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருட்சம்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர்  ஒருதலையாக காதலித்து வந்தாராம்.

இந்நிலையில் ராஜசேகர், ரம்யாவின் வீட்டிற்கே சென்று பெண் கொடுங்கள் என்று கேட்டுள்ளார் . அதற்கு ரம்யாவின் தந்தை சுப்பிரமணியன் முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் இன்று பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அமர்ந்து இருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார் .இதனால் ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரம்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர் .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments