Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? டி.ஆர் பாலு தகவல்

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (14:02 IST)
நாடாளுமன்றத்தில் மேகதாது அணை பிரச்சனை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வரும் என தெரிவித்தார் டி.ஆர்.பாலு. 

 
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன.
 
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். அதில் அவர், 13 பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளோம் என்றும் மேகதாது அணை பிரச்சனை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வரும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் 19 நாள் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments