Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

Prasanth Karthick
ஞாயிறு, 25 மே 2025 (15:20 IST)

இன்று ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மரம் விழுந்து சுற்றுலா சென்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காலை முதலே கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 

கனமழை ரெட் அலெர்ட் காரணமாக ஊட்டியிலும் சுற்றுலா பகுதிகள் முழுவதும் மூடப்பட்ட நிலையில், மக்கள் பைன் மரக்காடுகள் போன்றவற்றிற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது. 
 

ALSO READ: கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!
 

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மழை பெய்திருந்த நிலையில் அவர்கள் பைன் காட்டை சுற்றி பார்க்க சென்றபோது திடீரென ஒரு மரம் சரிந்து விழுந்துள்ளது. அது அந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆதிதேவ் மீது விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments