Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி எடுக்க ரூ.25 கட்டணம்.. விவசாயிகளின் புது பிசினஸ்..!

Mahendran
திங்கள், 30 செப்டம்பர் 2024 (12:12 IST)
தென்காசி மாவட்டத்தில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், அந்த இடத்தில் பலர் செல்பி எடுக்க வந்து கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து, அந்த நிலத்தின் உரிமையாளர்கள் செல்பி எடுக்க ரூ.25 கட்டணமாக வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, கேரள மக்களுக்கு சூரியகாந்தி மலர் இருக்கும் இடத்தில் புகைப்படம் எடுத்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நிலையில், கேரளாவிலிருந்து சுற்றுப்பயணமாக வந்த சுற்றுலா பயணிகள் தென்காசி அருகே பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி மலர்களை பார்த்து ஆச்சரியமடைந்து, அதன் அருகில் செல்பி எடுக்கின்றனர்.

சுற்றுலா பயணிகளும், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளும் செல்பி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு உள்ள சூரியகாந்தி மலரை விவசாயம் செய்த விவசாயிகள், செல்பி எடுக்க ஒரு நபரிடமிருந்து ரூ.25 வசூலித்து வருகிறார்கள்.
 
இதனை அடுத்து, பணத்தை செலுத்தி சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்களை ரசித்து, நடுவே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்: பின்னணியில் நடந்தது என்ன?

அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் விடுக்கப்பட்டதன் மர்மம் என்ன? கடம்பூர் ராஜூ

பாஜக நிர்வாகி வீட்டில் - வானதி சீனிவாசன் 'பிரதமரின் மனதின் குரல்' நிகழ்ச்சியினை கட்சியினரோடு சேர்ந்து பார்த்து ரசித்தர்.....

திமுகவினர் இரு தரப்பினர் பட்டாசு வெடிப்பதில் ஒருவருக்கொருவர் மோதல் பரபரப்பு!

மதுரையில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments