Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்மாவட்டங்களில் கனமழை: குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்மாவட்டங்களில் கனமழை: குற்றால அருவிகளில் குளிக்க தடை

Mahendran

, ஞாயிறு, 7 ஜனவரி 2024 (10:46 IST)
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. 

 
இந்த நிலையில் கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
இதனால் சுற்றுலா பயணிகள் குழுக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  இருப்பினும் தண்ணீர் குறைந்தவுடன் குளிப்பதற்கான தடை நீக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முக்கிய அம்சங்கள் என்ன..?