Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு.. 16 வயது அண்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை..!

Mahendran
புதன், 19 ஜூன் 2024 (10:21 IST)
சென்னை தாம்பரம் அருகே சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பி இடம் சண்டை போட்ட 16 வயது அண்ணன் கோபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டில் அண்ணன் தம்பி ஆகிய இருவர் இருந்து வரும் நிலையில் தம்பி சிக்கன் பிரியாணி விரும்பி சாப்பிட்டதாக தெரிகிறது. ஆனால் அவருடைய 16 வயது அண்ணனுக்கு சிக்கன் பிரியாணி பிடிக்காது என்பதால் சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிடக்கூடாது என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
 
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறிய நிலையில் அண்ணன் கோபத்தில் தனது அறைக்கு சென்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இறந்த 16 வயது சிறுவனின் பெயர் தாரிஸ் என்றும், இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
சிறுவயதிலிருந்து சிக்கன் பிரியாணி என்றால் பிடிக்காது என்றும் அது மட்டும் இன்றி அசைவ உணவே பிடிக்காது என்றும் தன் முன் யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் தாரிஸ்க்கு கோபம் வரும் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments