Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (10:35 IST)
கன்னியாகுமரியில் நாளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வர இருக்கும் நிலையில் நாளை ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை வர உள்ளார். அவர் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம், திரிவேணி சம்பவம் ஆகிய பகுதிகளை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு நாளை அனுமதி இல்லை என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரும் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பது கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வந்து சென்ற பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments