Publish Date: Fri, 05 Nov 2021 (08:18 IST)
Updated Date: Fri, 05 Nov 2021 (08:20 IST)
தமிழகத்தில் நாளை 8வது கொரோனா மெகா தடுப்பூசி திட்டம் நடத்தப்படும் நிலையில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா பரவல் தீவிரமடைந்திருந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் முதலாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தபட்ட நிலையில் 1,53,13,382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 8வது தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.