Publish Date: Thu, 10 Nov 2022 (20:43 IST)
Updated Date: Thu, 10 Nov 2022 (20:46 IST)
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது தெரிந்ததே
இதனை அடுத்து சற்றுமுன் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்தனர் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்
இதையடுத்து நாளை சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது