Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (17:00 IST)
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் உள்ளூர் பண்டிகை காரணமாக மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கமாக உள்ளது 
 
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு நாளை அதாவது ஜூலை 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பணிநாளாக  கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments