Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (17:00 IST)
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் உள்ளூர் பண்டிகை காரணமாக மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கமாக உள்ளது 
 
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு நாளை அதாவது ஜூலை 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பணிநாளாக  கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments