சந்திராயன்-3 விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது: இஸ்ரோ ட்வீட்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (16:54 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திராயன்-3  என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இந்த விண்கலம் தற்போது வெற்றிகரமாக நிலவை நெருங்கி வருகிறது என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
 
சந்திராயன்-3 என்ற விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது என்றும் சந்திராயன்-3 விண்கமல்ம் நான்காவது சுற்று பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நடந்து உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
மேலும் அடுத்ததாக ஐந்தாவது சுற்று பாதையை உயர்த்தும் பணி ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இஸ்ரோ  சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் வெற்றி கரமாக தரை இறக்கினால் நிலவில் விண்கலத்தை தரை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை பெறும். 
 
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன் 3 வெண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்றும் இந்த விண்கலம் வெற்றி அடைந்தால் நிலவில் உள்ள மர்மங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - ராமேஸ்வரம் 7.5 மணி நேரத்தில்.. விரைவில் தொடங்குகிறது வந்தே பாரத் ரயில் சேவை..

SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!

5 வயது சிறுமியை கடத்தி ரூ.90,000க்கு விற்பனை.. கடத்தியவர் யார் என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி..!

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.. இம்ரான்கான் மகன் ஆவேச பதிவு..!

இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments