Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வரை அடுத்து தூத்துக்குடி செல்கிறார் கவர்னர்

Webdunia
திங்கள், 28 மே 2018 (13:49 IST)
சமீபத்தில் தூத்துகுடியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்கள் தூத்துகுடி சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களும் தூத்துகுடிக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர்
 
இந்த நிலையில் துணை முதல்வரை அடுத்து நாளை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களும் தூத்துகுடிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நாளை காலை தூத்துகுடி செல்லும் கவர்னர் பன்வாரிலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.
 
நாளை கவர்னர் தூத்துகுடி செல்லவுள்ளதை அடுத்து தூத்துகுடியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாவட்ட காவல்துறையினர் செய்து வருகின்றனர். காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் கவர்னர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments