Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:45 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து நேற்று ஒருமணி நேரம் முன்பே மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மேலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் வானிலை அறிக்கையின்படி இன்று மாலை சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்து நாளை பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
மேலும் நாளை மறுநாள் வானிலை நிலைமையை பொறுத்து பள்ளிகள், கல்லூரிகள் இயங்குமா? என்பது குறித்து அறிவிப்பு செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments