Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:45 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து நேற்று ஒருமணி நேரம் முன்பே மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மேலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் வானிலை அறிக்கையின்படி இன்று மாலை சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்து நாளை பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
மேலும் நாளை மறுநாள் வானிலை நிலைமையை பொறுத்து பள்ளிகள், கல்லூரிகள் இயங்குமா? என்பது குறித்து அறிவிப்பு செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments