Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைக்கு ஆடிப்பெருக்கு இன்னும் தண்ணீர் வரலை – சோகத்தில் டெல்டா

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:42 IST)
நாளை (சனிக்கிழமை) ஆடிப்பெருக்கு நடைபெற இருக்கும் நிலையில் காவிரி ஆற்றில் இன்னும் தண்ணீர் வராததால் மக்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின்போது நீர்நிலைகளுக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு நாட்களில் நீர்நிலைகள் வறண்டுதான் கிடக்கின்றன. இந்த முறை ஆடிப்பெருக்கிற்காக 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருந்தாலும். அவை இன்னும் காவிரியின் தொன்மையான பகுதிகளான திருச்சி, கும்பகோணம்,தஞ்சாவூர் பகுதிகளை சேரவில்லை.

காவிரி டெல்டா பகுதிகளில் ஆடிப்பெருக்கு என்பதே காவிரிக்கு அவர்கள் செய்யும் விழாதான். ஆனால் அந்த காவிரியே வறண்டு கிடக்கும் நிலையில் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதில் மக்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments