Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவர்களுக்கெல்லாம் தூக்கு தண்டனைதான் சரி – விஜயகாந்த் அதிரடி

இவர்களுக்கெல்லாம் தூக்கு தண்டனைதான் சரி – விஜயகாந்த் அதிரடி
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (11:09 IST)
”குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வு” என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு கோவையில் முஸ்லீம் சிறுமி மற்றும் சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் மனோகரன் என்பவருக்கு தூக்கு தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் “கோவையில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தணடனை அளித்திருக்கிறது. இதை வரவேற்று உச்ச நீதிமன்றத்திற்கு தேமுதிக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் நடக்காத வண்ணம் போக்சோ சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் தேமுதிக சார்பில் வரவேற்கிறோம். குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வு” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிதக்கும் வெள்ளத்தில் தலையில் குழந்தையை சுமந்து காப்பாற்றிய போலீஸ் – மனதை நெகிழ செய்த வீடியோ