Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோயம்பேடு சந்தையில் பாதியாக குறைந்த தக்காளி விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..

கோயம்பேடு சந்தையில் பாதியாக குறைந்த தக்காளி விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..
, வியாழன், 29 ஜூன் 2023 (07:30 IST)
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தக்காளி விற்பனையான நிலையில் தற்போது பாதியாக குறைந்துள்ளதாக வெளியாகி இருந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மொத்த விலையாக ₹50 என விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது
 
தக்காளி வரத்து தற்போது அதிகமாக இருப்பதாகவும் அதனால் கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை மொத்த விலையாகவும், சில்லரையில் 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் தக்காளி மட்டுமே வந்த நிலையில் இன்று 800 டன் தக்காளி வந்து இருப்பதாகவும் இதனால் தக்காளி விலை சரிந்திருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இனி தக்காளி விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காபி ஃபில்டரை கண்டுபிடித்த மெலிட்டா பென்ட்ஸ் வெற்றிகரமான பெண் தொழிலதிபர் ஆனது எப்படி?