Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் பாதியாக சரிந்த தக்காளி விலை.. என்ன காரணம்?

Siva
வியாழன், 18 ஜூலை 2024 (08:07 IST)
நேற்று தக்காளி விலை 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று திடீரென நேற்றைய விலையில் இருந்து பாதி விலைக்கு தக்காளி விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியானது.

கனமழை காரணமாக அண்டை மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்தது என்பதும் நேற்று தக்காளி விலை 80 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் தக்காளி விலை நூறு ரூபாயை தொட்டுவிடும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று திடீரென நேற்றைய விலையில் இருந்து பாதியாக தக்காளி விலை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகமானதை எடுத்து 40 முதல் 45 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை ஆகி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இனி தொடர்ந்து தக்காளி அதிக அளவு வரத்து இருக்கும் என்பதால் பெரிய அளவில் தக்காளி விலை ஏற்றம் இருக்காது என்றும் கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளையும் குறைந்து இருப்பதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் வேறு மாதிரி கூட்டணியா.? அமைச்சர் கே.என் நேருவின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதில்.!!

நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்.! தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவு..!!

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு

குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரம்.. மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments