Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடுகிடுவென விலை குறைந்த தக்காளி! – கிலோ ரூ.35க்கு விற்பனை!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (09:21 IST)
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று கிடுகிடுவென விலை குறைந்துள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வரும் நிலையில் உள்ளூர் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்ததால் கிடுகிடுவென விலை உயர தொடங்கியது. இதனால் அதிகபட்சமாக தக்காளில் விலை கிலோ ரூ.150 ஐ தாண்டி விற்றதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் பசுமை பண்ணைகள் மூலமாக குறைந்த விலைக்கு தக்காளி விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தக்காளி விலை ரூ.100 வரை விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையாகி வருகிறது. இந்த விலை குறைவால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் மிரட்டலை துளி கூட மதிக்காத பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. 2வது நாளாக ஏற்றம்..!

மனைவியின் சடலத்தை பைக்கில் கட்டி ஓட்டிச் சென்ற கணவன்! பிடித்து விசாரித்த போலீஸ்! - நெஞ்சை உலுக்கிய சோகக் கதை!

இந்தியா - அமெரிக்கா தலைநகரங்கள் இடையே விமான சேவை நிறுத்தம்! - ஏர் இந்தியா அதிர்ச்சி அறிவிப்பு!

ஜெயலலிதா தான் என்னுடைய ரோல் மாடல்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments