Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு: வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (08:10 IST)
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் சுங்க கட்டணம் உயரும் என்ற அறிவிப்பு பெரும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாகவும் அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை நீக்கவேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக சுங்க கட்டணங்களை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரும் சுங்கச்சாவடிகள் பின்வருமாறு: திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை - பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை - தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம் - குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி, தஞ்சாவூர் - திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை ஆகிய 14 சுங்கச் சாவடி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments