Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது: நீட், செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசனை

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (17:43 IST)
முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் தென் மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் இந்த ஆண்டு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்துதல், செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
 
இன்னும் சில நிமிடங்களில் அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் அல்லது அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments