Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுடன் முடிகிறது நீதிமன்ற காவல்: அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்?

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (09:12 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சட்ட விரோதமாக பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார் 
 
கடந்த 14ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் நீதிமன்ற காவல் அவகாசம் முடிவடைகிறது. இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் நீடிக்கப்படுமா? அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது குறித்து இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தெரியவரும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments